வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் வருகிறாரா சுரேஷ் சக்கரவர்த்தி?... அவரே சொன்ன அசத்தல் பதில்...!
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கட்டாயம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அது நம்ம சுரேஷ் தாத்தாவாக இருக்க கூடாது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர். பிக்பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகளை கொளுத்தி போட்டு, அனிதா , சனத்துடன் சண்டை போட்டு என கன்டென்ட் கொடுப்பவராக அவர் மட்டுமே இருந்தார்.
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த சுரேஷ் சக்கரவர்த்தியிடம் வைல்ட் கார்டு மூலமாக மீண்டும் உள்ளே வாருங்கள் என அழைத்தனர்.
அதற்கு அவரோ 'இந்த வைல்ட் அனிமல்ஸ் இடம் இருந்து தப்பித்தது பெரிய விஷயம்' என கூறினார். இதனால் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல மாட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி பார்ட் 2” தொடங்க உள்ளது சமையல் சக்கரவர்த்தியான சுரேஷ் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவே மாட்டார் என்பது உறுதியாகிவிடும்.