“தலைவரால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம்”... ரஜினியை உசுப்பேற்ற வீட்டு வாசலில் போஸ்டர் ஓட்டிய ரசிகர்கள்....!
வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டுமென ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஓட்டி வருகின்றனர். தற்போது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.
நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதேபோல் தமிழகத்தில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய்யும், தனது படங்களின் மூலம் தொடர்ந்து அரசியல் கருத்துகளை கூறி வருவதுடன், விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்டோர் அரசிலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவது தற்போது அதிகரித்துள்ளது.
2021 சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சியை ஆரம்பிக்காமல் உள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்க வேண்டும் என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு செல்ல கூடிய வழியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது.
தற்போது வேலூரில் உள்ள ரஜினி ரசிகர்களின் வீட்டு கதவுகளில் அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு விடிவு காலம் என்பது போல் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக போஸ்டருக்கு பெயர் போன மதுரையில் இதே போல் ரஜினி கட்சி தொடங்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன
தற்போது வேலூர் மாவட்ட நிர்வாகிகளோ ஒரு படி மேலே போய் வீட்டுவாசலில் போஸ்டர் ஓட்டி ரஜினியை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்த போஸ்டர் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.