நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் ரகசிய திருமணம்?... கோலிவுட்டில் பரபரப்பு...!
'கயல்' படத்தின் மூலம் அறிமுகமான, நடிகை ஆனந்திக்கு திடீர் இரகசிய திருமணம் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’.
இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் 'கயல்' ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து, ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, என வரிசையாக திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் ஆனந்திக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீர் என இன்று இரவு இரகசிய திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்று கூறப்படுகிறது. இரகசியமாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள உள்ள தொழிலதிபர் குறித்து என ஒரு தகவலும் வெளியாகவில்லை.
ஆனந்தியின் திருமணம் இன்று இரவு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரன் ஓட்டலில் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.