ரவுடிகளுடன் வீடு புகுந்து நாஞ்சில் விஜயனை கொலை செய்ய முயன்ற சூர்யதேவி..! காயத்தோடு வெளியான புகைப்படம்..!
விஜய் தொலைக்காட்சி பல திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உயர்த்தியுள்ளது. அந்த வகையில் காமெடி ஷோ மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன், நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதற்கு சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்த விஷயத்தில் வனிதாவை பற்றி தாறுமாறாக பேசியவர் சூர்யா தேவி என்கிற பெண். இவரை தன்னுடைய யுடியூப் சேனலுக்காக பேட்டி ஒன்றையும் எடுத்தார்.
இதனால் கடுப்பான வனிதா தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி விமர்சித்த, நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
மேலும் நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி இருவரும் சேர்ந்திருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியது.
இந்நிலையில் இவர்கள் இடையில் தற்போது என்ன பிரச்சனை என தெரியவில்லை. சூர்யா தேவி தன்னை, சென்னை ரவுடிகளுடன் வீடு புகுந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறி, நாஞ்சில் விஜயன் பதிவிட்டு காயங்களுடன் கூடிய சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இடையில் தற்போது என்ன பிரச்சனை என தெரியவில்லை. சூர்யா தேவி தன்னை, சென்னை ரவுடிகளுடன் வீடு புகுந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறி, நாஞ்சில் விஜயன் பதிவிட்டு காயங்களுடன் கூடிய சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் உங்களுக்கு என்ன ஆனது என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரத்தில் உங்களை ஏன் சூர்யா தேவி கொலை செய்ய வேண்டும் எங்கிற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
நாஞ்சில் விஜயனின் புகைப்படங்களும் மற்றும் பதிவும் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.