ஜூன் 21 அன்று வரும் சூரிய கிரகணம்: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? விவரம் இதோ
ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று, சூரிய கிரகணம் வர உள்ளது. பொதுவாகவே சூரிய கிரகணத்தின் போது, வெளியாகும் புற ஊதா கதிர்கள் மனித உடலில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படுகிறது.
சரி சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் செய்ய கூடாத செயல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மக்கள் செய்ய வேண்டிய செயல்கள்:
கண்டிப்பக சூரிய கிரகணம் முடிந்தது, பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி சிலைகள் மற்றும் விளக்கு தட்டுகளை கழுவ வேண்டும்.
வீட்டையும் சுத்தம் செய்து விட்டு குளிப்பதும் அவசியம். புதிய ஆடைகள் உடுத்துவது சிறப்பு.
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும் என்று கூறப்படுகிறித்து.
வேண்டும் என்றால் தர்பண புல்லை அல்லது துளசி இலைகளைப் பயன்படுத்தி பாதுகாக்காது கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய பகவான் மற்றும் இறைவனைத் மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை சூரிய கிரகணத்தின் போது செய்யலாம்.
மக்கள் செய்யக் கூடாதா செயல்கள்:
கிரகணத்தின் போது உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் உடலுக்கு பிணி வரும் என பெரியவர்கள் சொல்லுவார்கள்.
கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது.
கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.
நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது. ஈரமான துணியின் மூலமாகவோ, கண்ணாடியின் மூலமாகவோ அல்லது தண்ணீரின் வழியாகவோ சூரியனை பார்க்கலாம்.