‘தை’ மகளுடன் முதல் தீபாவளியை கொண்டாடிய சினேகா - பிரசன்னா... மேட்சிங் உடையில் மெர்சலான ஃபேமிலி போட்டோஸ்...!
மகளது உடைக்கு மேட்சிங்காக சினேகா பட்டுப்புடவையும், அப்பாவும், மகனும் ஒரே மாதிரியான மஞ்சள் நிற குர்தாவும் அணிந்து சூப்பராக போஸ் கொடுத்துள்ளனர்.
"ஃபைவ் ஸ்டார்" படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரசன்னா, அதன் பின்னர் 'கண்ட நாள் முதல்', 'அழகிய தீயே' போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 'அஞ்சாதே' படத்தில் மிரட்டல் வில்லனாக அவதாரம் எடுத்து அனைவரையும் தெறிக்கவிட்டார். தற்போது துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 4 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் சினேகா. கடந்த பொங்கலுக்கு விருந்தாக வெளியான பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சினேகா, இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயின்ற வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு கடந்த ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
தற்போது தனது செல்ல மகளுடன் சினேகா - பிரசன்னா தம்பதி மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
ஓட்டு மொத்த குடும்பம் மங்களகரமான மஞ்சள் உடையில், புன்னகை தவழ ஜாலியாக தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
மகளது உடைக்கு மேட்சிங்காக சினேகா பட்டுப்புடவையும், அப்பாவும், மகனும் ஒரே மாதிரியான மஞ்சள் நிற குர்தாவும் அணிந்து சூப்பராக போஸ் கொடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பார்க்க செம்ம அழகாக இருக்கும் இந்த போட்டோஸ் லைக்குகளை விட ரசிகர்களின் வாழ்த்துக்களை அதிகமாக குவித்து வருகிறது.