MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!

3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!

Sivakarthikeyan 3rd Son Pavan Ear Pierced Function : திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோயிலில் சிவகார்த்திகேயன் தனது 3ஆவது மகன் பவனுக்கு காது குத்தும் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 05 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!

3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன் – குலதெய்வ கோயிலில் குவிந்த மக்கள்!

Sivakarthikeyan 3rd Son Pavan Ear Pierced Function : சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த 3 படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு சூரி மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் ஒரு சில காமெடி மூவிஸ் வெளிவர அந்த படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

25
3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன்

3ஆவது மகனுக்கு காது குத்திய சிவகார்த்திகேயன்

அதில் ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் அடங்கும். ஒரு நடிகரையும் தாண்டி பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என்று தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் வந்த எந்த படமு ரூ.150 கோடிக்கு மேல் வசூல் குவிக்காத நிலையில் அவருக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமரன் அமைந்தது. அவரை சினிமாவின் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

35
சிவகார்த்திகேயன் 3ஆவது மகன் பவண் காதணி விழா

சிவகார்த்திகேயன் 3ஆவது மகன் பவண் காதணி விழா

இப்போது பராசக்தி என்ற படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் சிவகார்த்திகேயன் தனது மாமா மகளான ஆர்த்தியை 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு முதலாவதாக ஆராதனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது மகள் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

45
சிவகார்த்திகேயன் குல தெய்வ கோயில்

சிவகார்த்திகேயன் குல தெய்வ கோயில்

அதன் பிறகு குகன் தாஸ் என்ற மகன் பிறந்த நிலையில் 3ஆவதாக பவன் என்ற மகன் பிறந்தான். ஏற்கனவே தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டிருந்த சிவகார்த்திகேயன் இப்போது தனது 3ஆவது மகனுக்கு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வ கோயிலில் காதணி விழா நடத்தியுள்ளார்.

55
சிவகார்த்திகேயன் மகனுக்கு காதணி விழா

சிவகார்த்திகேயன் மகனுக்கு காதணி விழா

மகா மாரியம்மன் என்ற குலதெய்வ கோயிலில் சிவகார்த்திகேயன் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சூழ தனது 3ஆவது மகன் பவனுக்கு காதணி விழா நடத்தியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெரினா படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களையும், ஒரு சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அதில் அமரன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் கொடுத்துள்ளார்.

இந்தப் படம் கொடுத்த வரவேற்பு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 25ஆவது படமான பராசக்தி என்ற படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் முருகன் கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செமத்தியான ட்ரீட்! சர்ச்சைகளை தாண்டி சாதிக்கும் 'எவர் கிரீன்' நாயகி! என்ன சேதி தெரியுமா?
Recommended image2
சமையல் செய்து சினிமா கத்துக்கிட்ட கரகாட்டகாரன் பட இயக்குனர்.! அஜித் பிரியாணியை ஓரங்கட்டும் கங்கை அமரன் "டிஷ்" எது தெரியுமா?
Recommended image3
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved