MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இளையராஜாவை பகைத்துக் கொண்ட பி சுசீலா; இருவருக்கும் இடையே இப்படி ஒரு மோதலா?

இளையராஜாவை பகைத்துக் கொண்ட பி சுசீலா; இருவருக்கும் இடையே இப்படி ஒரு மோதலா?

இசைஞானி இளையராஜா உடன் பாடகி பி சுசீலா சண்டையிட்டது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Nov 13 2024, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
P Susheela vs Ilaiyaraaja

P Susheela vs Ilaiyaraaja

தமிழ் திரையுலகில் கோலோச்சிய பாடகிகள் வெகு சிலரே, அதிலும் முதல் முறையாக சிறந்த பாடகிக்கான தேசிய விருது வென்ற பாடகி பி சுசீலாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இனிமையான குரலால் பல ஆயிரம் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ள பாடகி பி.சுசீலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இளையராஜா இசையில் பி சுசீலா அதிகளவில் பாடல்கள் பாடாதது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
Singer P Susheela

Singer P Susheela

இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக ஆகும் முன்னர் சில இசையமைப்பாளர்களிடம் கிட்டாரிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். அப்படி வி.குமாரிடம் அவர் கிட்டாரிஸ்டாக பணியாற்றியபோது பாடகி பி சுசீலா ஒரு பாடலை பாட வந்திருக்கிறார். அப்போது அந்தப் பாடல் பல்லவியை பாடிய சுசீலா, சரணத்தை பாடாமல் விட, ஏன் பாடவில்லை என்று இசையமைப்பாளார் வி.குமார் கேட்க, அதற்கு கிட்டாரிஸ்டாக இருந்த இளையராஜா தான் காரணம் என கைகாட்டி இருக்கிறார் சுசீலா.

இதையும் படியுங்கள்... பாடகி மட்டுமில்ல நடிகையாகவும் ஒரே ஒரு படத்தில் நடித்த பி.சுசீலா! பலரும் அறிந்திடாத தகவல்கள்!

34
ilaiyaraaja

ilaiyaraaja

வழக்கமாக கிட்டார் வாசிப்பவர் தான் எனக்கு கார்டு கொடுப்பார்கள். ஆனால் இளையராஜா எனக்கு கார்டு கொடுக்கவில்லை. அதனால் தான் என்னால் சரணம் பாட முடியவில்லை என பி.சுசீலா சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான இளையராஜா, அவர் வேண்டுமென்றே என்மீது பழிபோடுகிறார் என்று பதிலுக்கு சொல்ல, இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது நான் இங்கு கிட்டார் வாசிக்க தான் வந்திருக்கிறேன், சும்மா இருப்பதற்காக வரவில்லை என்று கோபத்தில் பி சுசீலாவை எதிர்த்து பேசி இருக்கிறார் இளையராஜா.

44
P Susheela Fight with Ilaiyaraaja

P Susheela Fight with Ilaiyaraaja

இளையராஜா - பி சுசீலா இடையேயான விரிசலுக்கு இந்த மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது. இதனாலேயே பி சுசீலாவுக்கு பதிலாக பாடகி எஸ்.ஜானகிக்கு அதிக பாடல்களை பாட இளையராஜா வாய்ப்பு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இளையராஜாவின் ஆஸ்தான பாடகியாகவே எஸ்.ஜானகி மாறிவிட்டார். பி.சுசீலாவை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு எஸ்.ஜானகியை முன்னணி பாடகியாக உயர்த்திய பெருமை இளையராஜாவையே சேரும். 

இதையும் படியுங்கள்... இளையராஜா - கமல் கூட்டணியில் உருவான 5 எவர்கிரீன் காதல் பாடல்கள்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved