பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த அர்ஜித் சிங்கின் தமிழ் பாட்டு பற்றி தெரியுமா?
பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் தனது 38 வயதில் ஓய்வை அறிவித்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இவர் இந்தி மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடி உள்ளார்.

Arijit Singh Tamil Song
பிரபல இந்திப் பாடகரும், இசையமைப்பாளருமான அர்ஜித் சிங், திரைப்பட பின்னணிப் பாடகர் என்ற தனது பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பாலிவுட்டின் இளம் தலைமுறை பாடகர்களில் மிகவும் பிரபலமான அர்ஜித், தனது புகழின் உச்சத்தில் இருக்கும்போது இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு, இசை உலகினரையும் ரசிகர்களையும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது 38 வயதில் இந்த ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இசை உலகை உலுக்கிய அறிவிப்பு
பல ஆண்டுகளாக தனக்கு அளித்த ஆதரவிற்கும் அன்பிற்கும் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பின்னணிப் பாடகராக இருந்த காலத்தை தனது வாழ்க்கையின் ஒரு அழகான கட்டம் என்று குறிப்பிட்டே, அதிலிருந்து விலகுவதாக அர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலிவுட் இசைத் துறையை வரையறுத்த குரல்களில் அர்ஜித் சிங்கின் குரலும் ஒன்றாகும். அதேசமயம், இது பின்னணிப் பாடல் துறையில் இருந்து மட்டுமே விலகல் என்றும், இசைத் துறையில் தொடர்ந்து நீடிப்பேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஓய்வு பெற்றார் அர்ஜித் சிங்
ஒரு சுயாதீன கலைஞராக மேலும் பல விஷயங்களைக் கற்று, புதிய மெட்டுகளை உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். அதே நேரத்தில், ஏற்கனவே ஒப்புக்கொண்ட அனைத்துப் பாடல்களையும் முடிப்பேன் என்றும், அவற்றில் பல அடுத்த சில மாதங்களில் ரசிகர்களைச் சென்றடையும் என்றும் அர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். சல்மான் கான் நடிக்கும் 'பேட்டில் ஆஃப் கல்வான்' உட்பட பல படங்களில் அர்ஜித் பாடிய பாடல்கள் உள்ளன.
அர்ஜித் சிங் பாடிய தமிழ் பாடல்
2005-ல் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் அர்ஜித் சிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 'மர்டர் 2' படத்தில் இடம்பெற்ற 'ஃபிர் மொஹபத்' என்ற பாடலைப் பாடி பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, பல வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். இரண்டு முறை தேசிய விருது வென்ற அர்ஜித் சிங்கிற்கு, 2025-ல் பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது. பல்வேறு மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் சூர்யா நடித்த 24 படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘நான் உன் அருகினிலே’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் டூயட் பாடலை அர்ஜித் சிங் தான் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

