மாஸ்டர் டீமை அடுத்து திருவண்ணாமலையில் சிம்பு தரிசனம்... ஈஸ்வரன் வெற்றி பெற வழிபாடு...!
மாஸ்டர் பட ரிலீசுக்கு முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் அர்ஜூன் தாஸ் ஆகியோர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர உள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீஸாக உள்ளதால் சிம்பு ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிம்புவின் நடிப்பில் வெளியாக உள்ள 45வது படமான இது நல்லபடியாக வெற்றி பெற வேண்டுமென சிம்பு திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
இன்று காலை 5 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்த சிம்பு, அவருடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கவுதம் உள்ளிட்ட சிலருடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் காரில் கிரிவலம் சென்ற சிம்பு இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற வித்தியாசமாக கட்டப்பட்ட இடுக்கில் நுழைந்து வெளியே வந்தார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிம்புவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸ்டர் பட ரிலீசுக்கு முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் அர்ஜூன் தாஸ் ஆகியோர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.