MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! ஏன் தெரியுமா?

அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! ஏன் தெரியுமா?

செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான ப்ரியா பிரின்ஸ் தன்னுடைய அம்மாவின் மகிழ்ச்சிக்காக வீட்டில் குறிப்பிட்ட பகுதியை இடித்துவிட்டு மீண்டும் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

1 Min read
manimegalai a
Published : Jun 10 2023, 08:25 PM IST| Updated : Jun 11 2023, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்ததன் மூலம் பிரபலமானவர் பிரியா பிரின்ஸ். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து கொண்டு, சீரியல்களில்  நடிக்க துவங்கினார். 

26

'என் பெயர் மீனாட்சி' என்கிற சீரியல் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட பிரியா பிரின்ஸ், இதை தொடர்ந்து, தமிழ் கடவுள் முருகன், EMI, மாப்பிள்ளை, உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்தார்.

36

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே'  சீரியலில் இவர் நடித்த வில்லி வேடம், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இலக்கியா, மற்றும் ராமன் தேடிய சீதை ஆகிய தொடர்களில் தன்னுடைய வில்லி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 

46

சீரியலை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க 2' படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2.ஓ மற்றும் நடுவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

56

இந்நிலையில், ப்ரியா பிரின்ஸ் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான புதிய வீட்டைக் கட்டி வந்தார். இந்த வீட்டில்   பார் செட்டப்புடன் கட்டி இருந்தார். இதுகுறித்து அவரே தனது யூடியூப்பில் பக்கத்தில் தெரிவித்தார்.

66

இந்த வீட்டின், ஒரு சிறு பகுதியை பிரியா பிரின்ஸ் இடித்து விட்டு மீண்டும் கட்டியுள்ளார். ஓப்பன் கிச்சனாக இருக்க வேண்டும் என அவரின் தாய் ஆசை பட்டுள்ளார். ஆனால் வேறு மாதிரி கட்டப்பட்டதால், தற்போது தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக குறிப்பிட்ட அந்த பகுதியை இடித்து விட்டு, மீண்டும் கட்டியுள்ளாராம். இதற்க்கு பல பட்சம் வரை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved