சூடுபிடிக்கும் போதைப்பொருள் விவகாரம்! நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு தொடர்பு! சிக்கிய வாரிசு நடிகை பகீர் தகவல்
நடிகை ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், சில நடிகைகளின் பெயரை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்கள் ரியா சத்ராபார்த்தியிடம் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செப்டம்பர் 8 ஆம் தேதி, ரியாவை கைது செய்தனர்.
இவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தொடர்ந்து, பல பூதாகரமான தகவல்கள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 25 பாலிவுட் பிரபலங்களின் பெயரை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லிஸ்ட் எடுத்து வைத்திருப்பதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்.சி.பி.யின் விசாரணையில் ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோர் பெயரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தாம், சாரா, ராகுல் மற்றும் சிமோன் ஆகியோர் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் சேர்ந்து போதைப்பொருள் வைத்திருந்ததாக ரியா வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ராகுல் ப்ரீத் சிங்கும், சுஷாந்த்துடன் சேர்ந்து போதை பொருள் உட்கொள்வார் என்கிற அதிர்ச்சி தகவலை ரியா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிது.
ரியா தற்போது தனது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் சமையல்காரர் தீபேஷ் சாவந்த் மற்றும் அவரது வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
மேலும் ரியா மற்றும், அவருடைய சகோதரர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கை மும்பை சிறப்பு நீதி மன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் இருப்பார்கள் என்றும் உத்தரவிட்டுள்ளது.