MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்கு 400 கோடி பணம்... 24 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதா? ராணா கூறிய தகவல்!

ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்கு 400 கோடி பணம்... 24 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதா? ராணா கூறிய தகவல்!

'பாகுபலி' படத்திற்காக கோடிக்கணக்கில் கடன் வாங்கியதாக ராணா டகுபதி தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jun 02 2023, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய மொழியில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களில் ஒன்று 'பாகுபலி'. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்தது. இதன் இரண்டு பாகங்களும்  சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 

24

குறிப்பாக இப்படத்தின்,  முதல் பாகம் 600 கோடியும், இரண்டாம் பாகம் 500 கோடியும் வசூல் செய்தது. இந்த படத்தின் வசூலை பற்றிய தகவல் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த படத்தை எடுப்பதற்காக சுமார் 400 கோடி ரூபாய் அதுவும் 24 பர்சென்ட் முதல் 28 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் ராணா டகுபதி.

பிகினி பேபியாக மாறி.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் ராய் லட்சுமி! போட்டோஸ்
 

34

இந்தியா டுடேக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்  'மூன்று-நான்கு வருடங்களுக்கு முன்பு படங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது? படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் வீட்டையோ அல்லது அவருடைய சொத்தையோ வங்கியில் அடமானம் வைத்து அல்லது வங்கியில் கடன் வாங்கி தான் படத்தை எடுத்தார்கள். இதற்கு, 24 முதல் 28 சதவீதம் வரை வட்டி செலுத்தி வந்தனர். பாகுபலி போன்ற படங்களுக்கும் அதே போல் சுமார் 300-400 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது.
 

44

'பாகுபலி-1' படத்திற்காக தயாரிப்பாளர்கள் 180 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், ஐந்தரை வருடங்கள் இப்படம் எடுக்கப்பட்டது. அதன் வட்டி விகிதம் 24 சதவீதமாக இருந்தது. படத்தின் முதல் பாகம் தெலுங்கில் அதிக வசூல் செய்த படத்தை விட இரட்டிப்பு பணம் செலவு செய்து எடுக்கப்பட்டது. அந்த வட்டி பணத்தில் படத்தின் இரண்டாம் பாகத்தையும் படக்குழுவினர் எடுத்துள்ளனர். ஒருவேளை படம் வெற்றி பெறாவிட்டால் என்ன நடக்கும் என்று தயாரிப்பாளர்கள் யோசிக்கவே இல்லை என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Ilayaraja Birthday: குடும்பத்தோடு இளையராஜா கேக் வெட்டி கொண்டாடிய 80-வது பிறந்தநாள்! வைரலாகும் போட்டோஸ்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved