காதல்லாம் இல்லையாம்... அந்த ‘மேட்டர்’ லீக் ஆகிடக்கூடாதுனு ஹேம்நாத்துக்கு கழுத்தை நீட்டிய சித்ரா? - பகீர் தகவல்
VJ Chitra : பிரபல சின்னத்திர நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் ஹேம்நாத்தை காதலித்து திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் மக்கள் விரும்பும் சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் டாப் ஹீரோயினாக வலம்வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தற்கொலை செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார். தற்கொலை செய்தபோது அவர் ஹேம்நாத்துடன் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஹேம்நாத் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது. இந்நிலையில், பிரபல பத்திரிகை செய்தியில் சித்ராவின் திருமணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் சீரியல் நடிகைகளை அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கும் கும்பலுடனும் சித்ராவுக்கு தொடர்பு இருந்ததாம்.
அந்த கும்பலின் தலைவனுடன் தொடர்பில் இருந்த ஹேம்நாத்துக்கு சித்ராவின் ரகசியங்கள் எல்லாம் தெரியவர, இது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, ஹேம்நாத்தை காதலிப்பது போல் நடித்து வேண்டாவெறுப்பாக திருமணம் செய்துகொண்டதாக” அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக சித்ரா ஹேம்நாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சிவாஜி வீட்டில் இருந்து சினிமாவில் குதிக்கும் மேலும் ஒரு வாரிசு... தாத்தா ரூட்டில் பயணத்தை தொடங்கிய தர்சன்