பாலியல் துன்புறுத்தல்: சீரியல் நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... பிரபல தயாரிப்பாளர் அதிரடி கைது...!
பிரபல சீரியல் நடிகை தற்கொலை வழக்கில் முன்னணி தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ரவாணி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தின் எசார் நகர் பி.எஸ்.யில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஸ்ரவாணி, கடந்த 8ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை தற்கொலைக்கு காரணம் டிக்டாக் பிரபலமான தேவராஜ் தான் என நடிகையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடீர் தகவல்கள் வெளியாகின.
இருவரும் பல சமயங்களில் தனிமையில் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, வீடியோக்கள் மற்றும் போட்டோவை வைத்து ஸ்ரவாணியிடம் பணம் பறிக்க முயன்றதாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் ஸ்ரவாணி தற்கொலை வழக்கில் முன்னாள் காதலர்களான சாய் கிருஷ்ணா ரெட்டி, தயாரிப்பாளர் அசோக் ரெட்டி ஆகியோர் மீதும் பெற்றோர் புகார் அளித்தனர்..
இவர்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஸ்ரவாணியை காதலித்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக பல வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். அந்த மன உளைச்சலால் தான் ஸ்ரவாணி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த வழக்கில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதில் அசோக் ரெட்டியை தவிர மற்ற இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தயாரிப்பாளர் அசோக் ரெட்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஸ்ரவாணி பேசி ஆடியோ போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை ஐதராபாத் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்னதாக டிக்-டாக் பிரபலம் தேவராஜ் உடன் பழகுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும், அவரை பிரித்துவிடும் படியும் ஸ்ரவாணியின் பெற்றோரை அசோக் ரெட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.