- Home
- Cinema
- சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்.. பாபி சிம்ஹா படத்தின் மூலம் திரையுலகிற்குள் வருகிறார்!
சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்.. பாபி சிம்ஹா படத்தின் மூலம் திரையுலகிற்குள் வருகிறார்!
தான் தற்போது சினிமா பிரவேசம் செய்துள்ளார். அதோடு தற்போது தன் தந்தை நடிக்கும் படத்திலேயே அவர் அறிமுகமாகிறார்.மேலும் இரண்டாவது மகன் ஹேமசந்திர பாபு திரைப்பட இயக்குநராக இருக்கிறார்.

ThadaiUdai
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை மகிழ்வித்தவர். குறிப்பாக கவுண்டமணியுடனான அவரது காம்போ கோலிவுட் வரலாற்றில் இன்றும் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும்.
ThadaiUdai
செந்திலின் மகன் மணிகண்ட பிரபு பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திலும் அப்பா மகனாக செந்தில் மற்றும் மணிகண்ட பிரபு நடிக்கிறார்கள் என்பது ஹைலைட்.
ThadaiUdai
தடை உடை' படத்தை ரேஷ்மி சிம்ஹா தயாரித்து, என்.எஸ்.ராகேஷ் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, மிஷா நரங், ரோகினி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் முடியும் தருவாயில் உள்ளது.
actor senthil
நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு பல் மருத்துவர் ஆவார். இவர் தான் தற்போது சினிமா பிரவேசம் செய்துள்ளார். அதோடு தற்போது தன் தந்தை நடிக்கும் படத்திலேயே அவர் அறிமுகமாகிறார்.மேலும் இரண்டாவது மகன் ஹேமசந்திர பாபு திரைப்பட இயக்குநராக இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.