சிக்கலில் செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்தி... ரசிகர்களை உஷார்படுத்திய இன்ஸ்டாகிராம் பதிவு...!
இந்நிலையில் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு மூத்த மகனான ஆதி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜும், அவருக்கு ஜோடியாக ஷபானா ஷாஜகானும் நடித்து வந்தனர்.
ஆதி - பார்வதி ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக்கின் நடிப்பும் பெரும்பாலானா ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி விலகினார்.
தற்போது அவருக்குப் பதிலாக தொகுப்பாளர் அக்னி செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதில் தான் இன்ஸ்டாகிராமைத் தவிர ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வேறு சோசியல் மீடியாவில் இல்லை என்றும், போலி கணக்குகளை பின் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த அக்கவுண்ட்கள் மீது புகாரளித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.