MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாதி மதம் தாண்டி... மனிதம் தான் முக்கியம் என்ற கருத்து வலியுறுத்தியுள்ளது அயோத்தி! நடிகர் சசிக்குமார் பேட்டி!

சாதி மதம் தாண்டி... மனிதம் தான் முக்கியம் என்ற கருத்து வலியுறுத்தியுள்ளது அயோத்தி! நடிகர் சசிக்குமார் பேட்டி!

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் அயோத்தி படத்தை பார்த்த பின்னர் நடிகர் சசிகுமார் இப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். 

2 Min read
manimegalai a
Published : Mar 07 2023, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் யாஷ் பால் ஷர்மா, புகழ், போஸ் வெங்கட் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. பலரும் கடந்து வரும் முக்கிய பிரச்சனை குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் நாயகன் சசிகுமார் தஞ்சையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

24

இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம், தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை நேற்று திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து  பார்வையிட்டார்.

Anikha: நீச்சல் குளம் பக்கத்தில் நின்று... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அசத்தல் போஸ் கொடுத்த அனிகா!

34

 பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி, மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விசயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கோம் என்றும், நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது 'அயோத்தி' திரைப்படம் என்று தெரிவித்தார்.

44

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம் அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உள்ள சர்ச்சைகள் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான், அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார். இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விசயம் என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காலில் மிகப்பெரிய கட்டோடு... எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! என்ன ஆச்சு?

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved