திடீரென ஆன்மீக பாதைக்கு மாறிய சமந்தா... கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் வெளியான வைரல் போட்டோ...!
தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பின்னரும், முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா... கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் திடீர் என ஆன்மீக பாதைக்கு மாறியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கணவருடன் லாக் டவுன் நேரத்தை செம்ம ஹாப்பியாக என்ஜோய் செய்த சமந்தா, லாக் டவுன் முடிந்த கையேடு, மாலத்தீவிற்கு சென்று ஓய்வெடுத்து திரும்பினார்.
இதை தொடர்ந்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் சமந்தா திடீர் என கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு விசிட் அடித்துள்ளார்.
அங்கு, சத்குருவை சந்தித்துள்ள சமந்தா, கழுத்தில் ருத்ராச்ச மாலை அணிந்து, குருஜியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
சமந்தா இதுகுறித்து கூறுகையில்: ஆன்மீக செயல்முறையின் முழு முயற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து, ஒரு மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். உங்கள் அறியாமையின் விளைவாக, நீங்கள் உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே நீக்கி கொண்டு, ஒரு நல்ல படைப்பாளியாக நம்மை உருவாக்கி கொண்டு வாழ்வது தான் ஆன்மீகத்தின் நோக்கம். இதுவொரு முற்றிலும் ஆனந்தமான மற்றும் எல்லையற்ற பொறுப்பு.
வெறும் அறிவு மட்டும் ஒரு சாதனை அல்ல. உங்கள் புலன்கள் அனைத்தும் ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன, ஆனால் நீங்கள் ஒருபோதும் உண்மையான வெளிப்புறத்தை அனுபவித்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவொளியை பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் வெள்ளை நிற உடையில் சத்குருவின் அருகில் அமர்ந்தபடி, கழுத்தில் ருத்ராச்சம் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.