Samantha: 15 வருஷமா சகிச்சிட்டு இருக்கேன்... கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா...!
Samantha Speaks about Her Husband : சமந்தா ஹீரோயினாக நடித்த 'மா இன்டி பங்காரம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தன் கணவர் ராஜ் நிடிமோரு பற்றி முதல்முறையாக சமந்தா பேசியுள்ளார்.

Samantha Opens Up About Husband Raj Nidimoru
சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமோருவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியும். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா ராஜ் நிடிமோருவைக் காதலித்தார். சிறிது காலம் காதலித்த இவர்கள், சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 'மா இன்டி பங்காரம்' படத்தைத் தயாரித்துள்ளனர். சமந்தா நாயகியாக நடிக்க, ராஜ் நிடிமோரு கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 19-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் திங்கள்கிழமை ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது.

கணவர் பற்றி ஓப்பனாக சொன்ன சமந்தா
மா இன்டி பங்காரம் டிரெய்லர்
சமந்தா தொடர்ந்து பேசுகையில், "'மா இன்டி பங்காரம்' டிரெய்லர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். எங்களுக்காக இங்கு வந்த ஒவ்வொரு ரசிகருக்கும் நன்றி. நந்தினியும் ராஜும் எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருப்பார்கள். 'மா இன்டி பங்காரம்' படத்தில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கும். இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெயினர். ஆக்ஷன், டிராமா, காமெடி என அனைத்து அம்சங்களும் உள்ளன. ஜூன் 19-ம் தேதி படம் வருகிறது. அனைவரும் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் இந்தப் படம் இருக்கும்" என்று கூறினார்.
டிரெய்லர் எப்படி இருக்கு?
'மா இன்டி பங்காரம்' டிரெய்லர் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், சமந்தாவிடம் இருந்து ஒரு நெக்ஸ்ட் லெவல் படம் வரப்போகிறது என்று சொல்லலாம். ஒரு கூட்டுக் குடும்பத்துக்கு மருமகளாக வரும் சமந்தா, அங்குள்ள பழக்கவழக்கங்கள் தெரியாமல் கஷ்டப்படுகிறார். வீட்டுக்குள் இருக்கும் சமந்தா வேறு, வெளியில் அவரது நிஜ முகம் வேறு. தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஒரு ஹீரோவைப் போல சண்டை போடுகிறார். டிரெய்லரின் தொடக்கத்தில், 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே' எனப் பெண் பார்க்க வந்தவர் கேட்க, அதற்கு சமந்தா காட்டும் ஆக்ஷன்தான் டிரெய்லரின் ஆரம்பமே.
மாஸ் காட்டிய சமந்தா
'நான் யாருன்னு உனக்குத் தெரியுமா?' என்று சமந்தா கவுன்ட்டர் கொடுப்பது மாஸாக இருக்கிறது. புகுந்த வீட்டில் கேட்கும் கேள்விகளால் திணறும் சமந்தா, 'திருடனைப் பிடித்து விசாரிப்பது போலக் கேட்டார்கள்' என்று கணவரிடம் புலம்புகிறார். 'என் உயிரைக் கொடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்' என்று அவர் பேசும் வசனம் பட்டையைக் கிளப்புகிறது. அதன்பின் சமந்தாவின் ஆக்ஷன் தொடங்குகிறது. அப்போது, அவர் பேசும் வசனம் ரசிகர்களுக்கு செம ட்ரீட். டிரெய்லர் மொத்தத்தில் அதிரடியாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

