'ஈஷா' சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா - ரகுல் ப்ரீத் சிங்! வைரலாகும் புகைப்படங்கள்!
ஒவ்வொரு வருடமும், கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா தியான மையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும், கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா தியான மையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் சிவராத்திரி அன்று 'ஈஷா' மையத்திற்கு வருகை தருவார்கள்.
இரவு முழுவதும், அவர்கள் தூங்காமல்... குதூகலமாக இருக்க வேண்டும் என, ஆட்டம்ம் பாட்டம் என் பல்வேறு நிகழ்ச்சிகள் விடிய விடிய நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில், பொதுமக்கள் மட்டும் இன்றி... ஒவ்வொரு வருடமும் திரைபிரபலன்கள் பலரும் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, காஜல்அகர்வால், கங்கனா ரனாவத், அதிதி ராவ் ஹைத்ரி, சமந்தா, ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பல நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதில் காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'ஈஷா' சற்குரு ஜக்கிவாசுதேவ், சில நிமிடங்கள் உரையாற்றி, நடனம் ஆடி மகிழ்ந்தார்.
பல பின்னணி பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டு, சிவராத்திரி நிகழ்ச்சியை மேலும் சிறப்பாகினர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.