சஞ்சய் தத் உடலை உருக்கிய புற்றுநோய்... சமீபத்திய போட்டோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்...!
தற்போது கீமே தெரபி எடுத்துக்கொண்டு வரும் சஞ்சய் தத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு கடந்த 9ம் தேதி திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் சஞ்சய் தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சஞ்சய் தத்திற்கு 3ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவெடுத்த சஞ்சய் தத் தனது சோசியல் மீடியாவில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், நண்பர்களே, மருத்துவ ரீதியான காரணங்களால் நான் என் சினிமா பணியிலிருந்து சிறுது காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், எனது நண்பர்களும் என்னுடன் உள்ளனர். எனது நலம் விரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்" என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது கீமே தெரபி எடுத்துக்கொண்டு வரும் சஞ்சய் தத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் மிகவும் இளைத்து போய் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எப்படி இருந்தவரை புற்றுநோய் இப்படி மாற்றிவிட்டதே என ரசிகர்கள் கண்கலங்குகின்றனர்.