வெளியில வரும் நிலைமை இருக்கா..? அதிர்ச்சி கேள்வியை கூட சிரித்து கொண்டே கேட்ட ரம்யா..!
பிக்பாஸ் வீட்டில் தற்போது விறுவிறுப்பான, ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. நேற்றைய தினம், ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் நண்பர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அவர்களை ஊக்குவித்து சென்ற நிலையில், இன்றைய தினம் ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டுக்கு வருவது தான் முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது.
வாசல் வழியில் வராமல், சற்று வித்தியாசமாக ரம்யாவின் அம்மா, ஸ்டோர் ரூம் வழியாக என்ட்ரி கொடுக்கிறார். அம்மாவைப் பார்த்தவுடன் ரம்யா கட்டிப்பிடித்துக்கொண்டு ’என்னோட பேட்டரி வந்திருக்கிறார்’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01ets53k5av73mb7ykjrq7aatr/ramya-biggboss30122020m2-jpg_300x187xt.jpg)
ரம்யா குறித்து சக போட்டியாளர்களுடன் அவருடைய தாயார் கூறிய போது ’அவள் எப்போதுமே அழற டைப் கிடையாது என கூறியதும் திடீர் என சோம், ‘ஆனா அழ வைப்பாங்க’ என்று காமெடியுடன் கூறுகிறார்
இதனையடுத்து நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை ஓப்பனாக பேசிக் கொள்ளுங்கள் என்றும், யாரும் யாரையும் கம்ப்ளைண்ட் பண்ண வேண்டாம் என்றும் அனைவருக்கும் அறிவுரை கூறுகிறார்.
இந்த நிலையில் ரம்யாவிடம் அவரது சகோதரர் ’இந்த வாரம் ஒரு வேளை டபுள் எவிக்சன் நடந்து நீ வெளியேறினால் அதற்கு காரணம் நீ கிடையாது’ என்று கூறியபோது ரம்யா அதிர்ச்சியாக அப்போ ’வெளிய வர்ற நிலைமை இருக்கா’ என்று சிரித்து கொண்டே கேட்பது புரோமோவில் வெளியாகியுள்ளது.