ராசியான வைர தோடு மிஸ்ஸிங்... கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம்..! ரஜினி பட நடிகை அறிவிப்பு..!
தமிழில் ’பருவராகம்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ ஆகிய படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. இவர் தன்னுடைய வைரத்தோட்டை மிஸ் செய்து விட்டதாக பதிவு ஒன்றை போட்டு அதனை கண்டு பிடித்து தந்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல்வேறு பரிமாணங்களில் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஜூஹி சாவ்லா.
1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சாவ்லா நடிகை ஆனார். திறமையான நடிப்பால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
மேலும் குயாமத் செ குயாமத் டக் மற்றும் தர் முதல் ஹம் ஹைன் ரகி பியார் கி , வரை காதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். யெஸ் பாஸ் மற்றும் இஷ்க் திரைப்படங்கள் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தன.
நடிப்பை தாண்டி, சாவ்லா அவரது டைமிங் காமெடி ரசிகர்களை கவர்ந்தது. இதுவே இவரின் நிகழ்ச்சி தொகுப்பின் ஸ்பெஷல் என்றும் கூறலாம்.
தற்போது வரை பிஸியான பெண்மணியாக வலம் வரும் ஜூஹி சாவ்லா, சமீபத்தில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கவுண்டர் செக்கிங் செய்துவிட்டு பாதுகாப்பு சோதனைக்காக காத்திருந்தபோது, அப்போது அவரது ஒரு காதில் இருந்த ஒரு வைரத்தோடு காணாமல் போனதாக தெரிகிறது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மும்பை விமான நிலையத்தில் உட்கார்ந்து இருந்தபோது ஒரு காதில் இருந்த வைரத்தோடு கீழே விழுந்து காணாமல் போய்விட்டது. அந்த தோடை நான் கடந்த 15 வருடங்களாக அணிந்து வருகிறேன். அது எனக்கு ராசியான தோடு. அந்த தோடை கண்டவர்கள் தயவு செய்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவியுங்கள், தகுந்த சன்மானம் அளிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னிடம் உள்ள இன்னொரு தோட்டின் புகைப்படத்தினையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் தன்னிடம் உள்ள இன்னொரு தோட்டின் புகைப்படத்தினையும் அவர் பதிவு செய்துள்ளார்.