'ராஜா ராணி' சீரியல் நடிகைக்கு நடு கடலில் கேக் வெட்டி சர்பிரைஸ் கொடுத்த கணவர்..! தீயாய் பரவும் புகைப்படம்..!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான, 'ராஜா ராணி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை வைஷாலிக்கு அவரது காதலர், நடு கடலில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைஷாலி, சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'கதகளி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
அதன் பின்னர் காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார்.
ஆனால் திரைப்படங்களில் அவரால் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்க முடியவில்லை. எனவே சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் இதுவரை, மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய காதல் மனைவியின் பிறந்தநாளை மிகவும் வித்தியாசமாக கொண்டாட நினைத்த சத்யா, கடலுக்கு நடுவில் ஒரு போட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.