- Home
- Cinema
- தொடரும் வசூல் வேட்டை... எல்லா ஏரியாவிலும் கில்லி மாதிரி சொல்லி அடித்த புஷ்பா - 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
தொடரும் வசூல் வேட்டை... எல்லா ஏரியாவிலும் கில்லி மாதிரி சொல்லி அடித்த புஷ்பா - 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
புஷ்பா (Pushpa) படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது.
அதன்படி இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
ரிலீசுக்கு பின் இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
முதல் நாளில் இப்படம் உலகளவில் 71 கோடி ரூபாய் வசூலித்திருந்த நிலையில், தற்போது இரண்டு நாளில் இப்படம் 116 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிவேகமாக 100 கோடியை கடந்த படம் என்ற சாதனையை புஷ்பா படைத்துள்ளது.