MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அர்ஜுன் தாஸ் உடன் காதலா?... நெருக்கமாக எடுத்த போட்டோ வைரலானதால் வேறு வழியின்றி உண்மையை சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி

அர்ஜுன் தாஸ் உடன் காதலா?... நெருக்கமாக எடுத்த போட்டோ வைரலானதால் வேறு வழியின்றி உண்மையை சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி

மாஸ்டர், கைதி பட வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்த செல்பி புகைப்படம் வைரலான நிலையில், அதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Jan 13 2023, 07:36 AM IST| Updated : Jan 13 2023, 07:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன், விஷாலின் ஆக்‌ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த அவர், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பேமஸ் ஆனார். அப்படத்தில் சமுத்திரக் குமாரி பூங்குழலியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. அவரது கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களும் கிடைத்தன.

24

இதையடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆன கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. அப்படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்திருந்த ஐஸ்வர்யா, ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து மாஸ் காட்டி இருந்தார். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... கடற்கரை பங்களா... விதவிதமான கார்கள் என ஆடம்பர வாழ்க்கை வாழும் விஜய்... இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா தளபதி?

34

இதனிடையே நேற்று முன்தினம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர், கைதி பட வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்து அந்த பதிவில் ஹார்டின் எமோஜியையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக கருதி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனால் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.

44

அந்த புகைப்படம் மிகவும் வைரல் ஆனதை அடுத்து, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய கடைசி பதிவு இந்த அளவுக்கு பேசுபொருள் ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் எதர்ச்சியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது போட்டோ எடுத்து பதிவிட்டேன். எங்களுக்குள் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நேற்றிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களே, அவர் உங்களுக்கு தான்” என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... போட்டிபோட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்... டிவி-யில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved