விஜே சித்ரா ஓட்டலில் இறக்கவில்லையா?... சிசிடிவியில் பதிவான காட்சிகளால் அதிரடி திருப்பம்...!
விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நசரத்பேட்டை ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள சில காட்சிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
இதனிடையே சித்ராவை பதிவு திருமணம் கொண்ட அவருடைய கணவர் ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சித்ரா - ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் தான் திருமணம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று இரவு சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சித்ரா மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவருடன் அடிக்கடி சண்டையிட்டதும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் சித்ரா நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அடுத்தடுத்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. .
இதனிடையே சித்ரா தங்கியிருந்த நசரத்பேட்டை ஓட்டலின் சிசிடிவி காட்சிகளையும், அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் ஆம்புலன்ஸ் ஒன்று ஓட்டலுக்குள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலைக்கு முயன்ற பின்னர் ஏதாவது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்களா? அல்லது வேறு எங்காவது இறந்தவரின் சடலம் இங்கு கொண்டுவரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.