விஜே சித்ரா ஓட்டலில் இறக்கவில்லையா?... சிசிடிவியில் பதிவான காட்சிகளால் அதிரடி திருப்பம்...!
First Published Dec 15, 2020, 1:35 PM IST
விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நசரத்பேட்டை ஓட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள சில காட்சிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?