- Home
- Cinema
- 3 பெக் சரக்கு அடித்தும் போதையே ஏறலனு புலம்பிய ரஜினிகாந்த்... எல்லாத்துக்கு காரணம் கமலின் இந்த படம் தானாம்
3 பெக் சரக்கு அடித்தும் போதையே ஏறலனு புலம்பிய ரஜினிகாந்த்... எல்லாத்துக்கு காரணம் கமலின் இந்த படம் தானாம்
கமலின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை பார்த்த பின்னர் வீட்டுக்கு வந்து 3 பெக் சரக்கடித்தும் தனக்கு போதையே ஏறவில்லை என பிரபல இயக்குனரிடம் ரஜினிகாந்த் கூறினாராம்.

நடிகர் கமல்ஹாசனும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சமகாலத்தில் அறிமுகமான நடிகராக இருந்தாலும், இவர்கள் இருவரும் எந்தவித பொறாமையும் இன்றி இன்றளவும் நண்பர்களாக பழகி வருகின்றனர். ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு குடிப் பழக்கம், சிகரெட் பழக்கம் போன்றவை இருந்தன. பின்னர் நாளடைவில் ஆன்மீகத்திற்குள் அவர் சென்றது அந்த பழக்கங்களை எல்லாம் நிறுத்திவிட்டார். அவர் 70 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதற்கு அந்த பழக்கங்களையெல்லாம் கைவிட்டதும் ஒரு முக்கிய காரணம்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. அப்படத்தை பி.வாசு தான் இயக்கி இருந்தார். சந்திரமுகி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சுமார் 18 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் பி.வாசு. அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... குக் ஆக களமிறங்குகிறாரா மணிமேகலை..? புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம் - ஒருவேளை இருக்குமோ..!
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் பி.வாசு. அதன்படி நடிகர் ரஜினிகாந்திடம் நீங்க ஏன் நாயகன் மாதிரி ஒரு படம் பண்ணல சார்னு கேட்டாராம் பி.வாசு. இதற்கு நாயகன் படத்தை பார்த்த பின் தான் செய்த செயல் ஒன்றை வாசுவிடம் விவரித்துள்ளார் ரஜினி. நாயகன் படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் 3 பெக் சரக்கு அடித்ததாகவும், ஆனால் தனக்கு சுத்தமாக போதை ஏறவில்லை என கூறி இருக்கிறார் ரஜினி.
அப்பறம் என்ன சார் பண்ணீங்கனு வாசு கேட்க, உடனடியாக கமலுக்கு போன் போட்டதாக கூறினாராம் ரஜினி, அந்த உரையாடலில் கமலிடம், இந்த மாதிரி 3 பெக் போட்டும் போதை ஏறல. அந்த போதையை விட வேலுநாயக்கரின் போதை அதிகமா இருக்குனு சொல்லி இருக்கிறார் ரஜினி. அந்த அளவுக்கு கமலின் நடிப்பு ரஜினியின் மண்டைக்குள்ளயே ஓடிக்கொண்டு இருந்ததாக பி.வாசு அந்த பேட்டியில் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ‘வாத்தி’யிடம் சரண்டர் ஆன ‘வாரிசு’... பாக்ஸ் ஆபிஸில் விஜய் படத்தை பந்தாடிய தனுஷ்