10 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகிய கீரவாணி! ஆஸ்கார் வரை அழைத்து வந்த ராஜமௌலி!
சினிமாவில் கால் பதிக்கும்போதே முடிவையும் அறிவித்த இசையமைப்பாளர் கீரவாணி, அதன் படி கடந்த 2014ம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். ஆனால் தற்போது ஆஸ்கர் விருதையும் பெற்றிருக்கிறார்.

பாகுபலி புகழ் இசையமைப்பாளர் கீரவாணி, நாட்டு கூத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் இருந்திருந்தால், அவரை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். டோலிவுட் தெலுங்கில் கீரவாணியாக இருக்கும் இவர் கோலிவுட் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளர் மரகதமணி ஆவார். பழம்பெரும் இயக்குனர் கே .பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
2009ம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லினியர் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கியதை அடுத்து, இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் மேடையை அலங்கரித்தவர் இந்த கீரவாணி. அவரை இன்னும் நன்றாக நினைவுபடுத்த வேண்டும் என்றால் அக்காலம் முதல் இக்கால இளவுகளை வரை ரசிக்கும் மம்முட்டியின் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலுக்கு இசையமைத்தவர் தான் இந்த கீரவாணி என்கிற மரகதமணி. இவர் இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளர்.
இசையமைப்பாளர் கீரவாணி இந்த இடத்திற்கு எளிதாக ஒன்றும் வரவில்லை, ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1989-ம் ஆண்டு அவர் சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பாடலை தொடங்கும் போதே சினிமாவில் இருந்து விலகும் தேதியையும் முடிவெடுத்து விட்டதாக தெரிவித்தார்.
அதன்படி 2016-ம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகி விடுவதாக 2014-ம் ஆண்டு அறிவித்துவிட்டார் இந்த கீரவாணி. ஆனால் அவர் எதற்கு, என்ன காரணத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்பதில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார்.
இதனிடையே, கீரவாணிக்கு பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி வடிவில் அதிர்ஷ்டம் தேடி வந்தது. ராஜமௌலியின் மகதீரா திரைப்படத்திலிருந்து இருவருடைய பயணமும் தொடர்ந்து வருகிறது. நானியின் ''நான் ஈ'', பிரபாஸின் ''பாகுபலி'' இரண்டு பாகங்களும் போன்ற படங்களில் இசை அமைத்ததன் மூலம் இன்றைய தலைமுறை எதிர்பார்க்கும் ரசிகர்களையும் தன்னுடைய திறமையால் கவர்ந்திருக்கிறார் இந்த கீரவாணி.
இன்று ஆர்ஆர்ஆர் படத்தில் கீரவாணியின் துள்ளல் இசையோடு சிறப்பான நடன அசைவுகளுடன் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு கூத்து’ பாடல் மூலம் ராஜமௌலிக்கு பெருமை சேர்த்ததோடு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலக அரங்கில் நடனமாட வைத்துள்ளார். சினிமாவை விட்டு விலகுவதாக இருந்த கீரவாணியை எப்படியோ மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இன்று ஆஸ்கர் நாயகனாக அழகு பார்த்து இருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.