வெளிப்படையாக நடக்கும் நாமினேஷன்...! ரியோவை வச்சு செய்யும் போட்டியாளர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, இதுவரை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறாத ஒரு சம்பவம் நடந்தது. ஆதாவது, இந்த வாரத்தில் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சனி கிழமை அன்று, ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் அறந்தாங்கி நிஷா வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் விளையாட்டு மேலும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக இன்றைய தினம், சற்று வித்தியாசமாக ஓப்பன் நாமினேஷன் செய்யும்படி கூறுகிறார் பிக்பாஸ்.
அதன் படி ஒவ்வொரு போட்டியாளராக வந்து, தாங்கள் நாமினேஷன் செய்ய விரும்பும் நபரை அறிவிப்பது தான் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
முதலில் வரும் பாலாஜி ரொம்ப நாட்களாகவே இந்த ஓப்பன் நாமினேஷனுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கிறார்.
பின்னர் ஆரி, ரியோவை நாமினேட் செய்வதாக கூறுகிறார். அர்ச்சனா ஆரி ரியோவை நாமினேட் செய்ததாலேயே அவரை நாமினேட் செய்வது போல் தெரிகிறது.
அதே போல் ரம்யா, அனிதா , பாலாஜி என தொடர்து ரியோவையே நாமினேட் செய்கிறார்கள். இடையில் பாலாஜி மற்றும் ரியோ இடையே நடக்கும் வாக்கு வாதமும் காட்டப்படுகிறது.