இந்த வாரம் வெளியே செல்லும் நபர் இவர் தான்..! ரேகா கூறியது பலிக்குமா?
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா தன்னுடைய பிக்பாஸ் அனுபவம் குறித்து பல்வேறு ஊடகங்களிடம் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மிகவும் எமோஷனால் போட்டியாளராக இருக்கும் அனிதா பற்றி தெரிவித்துள்ளார்.
அனிதா மிகவும் நல்ல பெண் தான், அவருடைய மைனஸ் என்றால் அது அவரது முன் கோபம் தான்.
ஒருவேளை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அனிதா வெளியேற நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்களில் இருந்து யார் வெளியே செல்வார். ஒருவேளை ரேகாவின் வார்த்தை பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் ரேகா வெளியே செல்லும் போது, ஷிவானி அழுதது பொய் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது உண்மை தான் என்றும், கடைசி சில நாட்கள் அவர் தன்னிடம் மிகவும் நெருக்கமாக மாறிவிட்டதாகவும், அவருடன் மகளுடன் உள்ள ஒரு உணர்வை தான் பெற்றதாக கூறியுள்ளார் ரேகா.