கணவருடன் மீண்டும் லிப்லாக்... படுக்கையறை போட்டோவை வெளியிட்ட வனிதாவை விளாசும் நெட்டிசன்கள்...!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தனது பெற்றோரின் திருமண நாளான 27ம் தேதி அன்று பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டார். பலரும் 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதை விமர்சித்தாலும், அவருடைய மகள்கள், ரசிகர்கள் என பெரும்பாலானோர் வனிதாவின் இந்த முடிவுக்கு துணை நின்றனர். இந்நிலையில் வனிதா தனது கணவர் பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட அது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் வீடியோக்களை எடிட் செய்யாமல் திண்டாடிய வனிதாவிற்கு பீட்டர் பால் உதவ, இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த சனிக்கிழமை வனிதாவின் வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது பீட்டர் பால் வனிதாவின் உதட்டில் முத்தம் கொடுத்து அன்பை பறிமாறிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக பீட்டர் பாலும் தானும் பிரிந்து வாழ்த்து வரும் நிலையில், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் குற்றச்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீட்டர் பால் தன்னை திருமணம் செய்து கொண்டது ஹெலனுக்கு தெரியும் என்றும், தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் வனிதா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருமணமான அடுத்த நாளே வனிதாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனையாக அவரது ரசிகர்கள் கலங்கி போயுள்ளனர். ஆனால் வனிதாவே கூலாக தனது காதல் கணவரின் உதட்டில் முத்தமிடும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
படுக்கையறையில் அமர்ந்தபடி பீட்டர் பாலும், வனிதாவும் முத்தமிட்டுக்கொள்ளும் இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த போட்டோவுக்கு ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என கேப்ஷன் வேறு கொடுத்து நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளனர்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் வனிதாவை வறுத்தெடுத்து வருகின்றனர். இதையெல்லாம் உங்கள் படுக்கையறையில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும், இப்படிப்பட்ட போட்டோக்களை ஏன் வெளிப்படையாக ஷேர் செய்கிறீர்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.