MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கையில் ஆஸ்கர் விருதை ஏந்திய பொம்மன் - பெல்லி..! மெய் சிலிர்த்த தருணங்களின் புகைப்படங்கள் இதோ..!

கையில் ஆஸ்கர் விருதை ஏந்திய பொம்மன் - பெல்லி..! மெய் சிலிர்த்த தருணங்களின் புகைப்படங்கள் இதோ..!

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம், ஆஸ்கர் விருதை தட்டி சென்ற நிலையில், இதில் இடம்பெற்ற யானைகளை வளர்த்த, பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையில் ஆஸ்கர் விருதை கொடுத்து கௌரவித்துள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Mar 23 2023, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயற்கை எழில் பொங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில், பல ஆண்டுகளாக யானை பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் தான் பொம்மன் மற்றும் பெல்லி.  தாயை பிரிந்து பரிதவித்து நின்ற யானை குட்டிகளுக்கு... தாயை மிஞ்சிய பாசத்தை காட்டி, தங்களுடைய குழந்தை போல் வளர்த்து வந்தனர். அப்படி இவர்கள் பாராட்டி...  சீராட்டி வளர்த்த இரண்டு யானை குட்டிகள் தான் ரகு மற்றும் அம்மு.

27

2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம், அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை தான் ரகு. உடலில் பல காயங்களுடன் காட்டுக்குள் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்தது முதலே, ரகு-வை பொம்மனும், பெல்லியும் தான் பராமரித்து வருகின்றனர்.

Rajinikanth: ஜெயிலர் படப்பிடிப்புக்காக கொச்சிக்கு பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வைரலாகும் வீடியோ..

37

அதே போல் ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமான நிலையில் மீட்கப்பட்ட யானை குட்டி தான் அம்மு.  இதனை அதனுடைய தாயுடன் சேர்க்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், யானை குட்டிக்கு உடல் பலவீனமாக இருந்ததோடு, வயிறு வீங்கி காணப்பட்டது. மேலும் அந்த யானை குட்டியை பரிசோதித்த போது... பசி காரணமாக சில ஜல்லி கல்களை அது சாப்பிட்டதால், செரிமான தன்மை இல்லாமல், பால் மற்றும் உணவு எடுக்க மறுத்தது. பின்னர் அந்த யானை குட்டிக்கு உரிய சிகிச்சை அளித்து முதுமலை காப்பகத்திற்கு கொண்டு வந்து, பொம்மன் மற்றும் பெல்லியால் பராமரிக்கப்பட்டது.

47

முதுமலை புலிகள் காப்பகத்தில் கேம்ப் நடைபெறும் போது அங்கு அடிக்கடி வரும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, குட்டி யானைகளின் சேட்டைகளால் கவரப்பட்டு ஆவணப்படம் எடுக்க விரும்பியுள்ளார். அதன்படி வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று,  பொம்மன் மற்றும் பெல்லியின் உதவியுடன், சுமார் மூன்று மாதம் காலம் ஆவணப்படத்தை எடுத்தார். 

Breaking: நடிகை யாஷிகாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

57

இதில் யானை குட்டிகளின் சேட்டைகள், பொம்மன் மற்றும் பெல்லி இருவரும் அதற்கு பாசம் காட்டும் விதம், யானை குட்டிகள் அவர்கள் பேச்சுக்கு அடிபணிவது, விலங்குகள் என்பதை தான் அந்த இரண்டு யானைகளையும் அவர்கள் பிள்ளைகள் போல் வளர்ப்பது போன்ற நடவடிக்கைகளை உற்று கவனித்து படமாக்கினார்.

67

இந்த ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி விலங்கு நல ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஆஸ்கர் விருது போட்டியிலும் கலந்து கொண்டு சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அதே போல் இந்த ஆவணப்படத்தில் நடித்திருந்த பொம்மன் - பெல்லி ஆகிய இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. இந்த ஆவணப்படத்தின் ரியல் நாயகன் - நாயகியான இவர்கள் இருவரையும், ஆஸ்கர் மேடையில் கௌரவிக்கவில்லை என பலர் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்திய நிலையில்,  தற்போது இவர்கள் இருவரையும் கௌரவிக்கும் விதமாக நெட்பிலிக்ஸ் நிறுவனம், இவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி உள்ளது.

சைடு போஸில் சாச்சிட்டாலே.. கேரள புடவையில்... சும்மா கும்முனு போஸ் கொடுத்து கிக் ஏற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

77

 மும்பையில் நடைபெற இந்த விழாவிற்காக,  பொம்மனும் மற்றும் பெல்லியை  விமானத்தில் அழைத்துச் சென்று நட்சத்திர விடுதிகள் தங்க வைத்து அழகு பார்த்துள்ளது நெட்பிளிக்ஸ். இந்த  பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது, ஆஸ்கர் விருதை கையில் வைத்தபடி அனைவருக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர் பொம்மனும் - பெல்லியும். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் அனைவர் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved