பிரபுதேவா பெயர் பச்சை குத்திய இடத்தில் இப்போது நயன் போட்டிருக்கும் டாட்டூ என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார், நடிகை நயன்தாரா தனது முன்னாள் காதலர் பிரபு தேவாவின் நினைவில், முழு மனதோடு அவருடைய பெயரை பச்சை குத்தியிருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். இப்போது இந்த 'பிரபு' டாட்டூவுக்கு குட்பை சொல்லிவிட்டு என்ன டாட்டூ குத்தி உள்ளார் தெரியுமா?
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில், நயன்தாரா மற்றும் பிரபுதேவா திருமணம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், திடீர் என ஒரு சில காரணங்களுக்காக இருவருமே தங்களுடைய உறவை முறித்துக்கொண்டதாக கூறி, அதிகார பூர்வமாக அதனை தெரிவித்தனர்.
கிட்ட தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். நயன்தாராவும் திரையுலகை விட்டு விலகி, திருமண கனவை கண்டுகொண்டிருந்த போது தான் இந்த அதிர்ச்சி தகவலை திடீர் என இருவரும் வெளியிட்டனர்.
எதிலும் வித்தியாசத்தை விரும்பும் நயன்தாரா, தன்னுடைய முன்னாள் காதலர் பிரபுதேவா பெயரில் கூட பி என்கிற ஆங்கில வார்த்தையும் ரபு ஆகியவற்றை தமிழில் டாட்டூ செய்திருந்தார்.
பிரபுதேவாவை விட்டு பிரிந்தாலும், சில காலம் இந்த டாட்டூவை அவர் அழித்திராமல் வைத்திருந்தாலும், பின்னர் அந்த டாட்டூவுக்கும் குட்பை சொல்லிவிட்டார்.
மேலும் அந்த பெயரை நீக்கி விட்டு 'positivity' என புதிய டாட்டூ குத்தியுள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
கையில் டாட்டூவை பாசிட்டிவாக மாற்றி, வாழ்க்கையையும் தற்போதைய காதலர் விக்னேஷ் சிவனுடன் மிகவும் சந்தோஷமாக அனுபவித்து வருகிறார்.
ரொமான்டிக் காதலோடு சுதந்திர பறவையாய் சுற்றி வரும் இந்த ஜோடி விரைவில் வெட் லாக் வட்டத்துக்குள் மாட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் தீராத ஆசை.