பொன் நகை அணிந்து புன்னகையுடன் பொங்கல் வைத்த நயன்தாரா... வைரலாகும் அழகு போட்டோ...!
சோசியல் மீடியா குயினாகவும் வலம் வரும் நயன்தாரா பொங்கல் வாழ்த்துடன் வெளியான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. 2-வது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, வந்த வேகத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக உயர்ந்தார்.
காதல் விவகாரத்தில் சிக்கிவிட்டாலே எல்லாம் முடிந்தது என்ற தமிழ் சினிமாவின் வழக்கத்தை மாற்றி இரண்டு முறை காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் விழுந்ததை விட வேகமாக எழுந்து நின்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட மட்டுமல்ல, நயனின் கேரியரிலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘நானும் ரவுடி தான்’. அதன் பின்னர் முழுக்க கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் என நடித்து பட்டையைக் கிளப்பினர்.
அதேபோல் அஜித், விஜய், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடனும் போட்டி, போட்டி நடித்து வருகிறார். விஸ்வாசம், பிகில், தர்பார் என நயன் ஜோடியாக நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டு தான்.
தற்போது நயன்தாரா கைவசம் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அவருடைய தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, மெகா ஸ்டாருடன் தெலுங்கில் ஒரு படம் என பிசியாக வலம் இருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர்.
சோசியல் மீடியா குயினாகவும் வலம் வரும் நயன்தாரா,
அழகிய பட்டுப்புடவையுடன் ஜொலி ஜொலிக்கும் நகைகள் அணிந்த படி புன்னகை பொங்க, பொங்கல் பானையுடன் கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.