காதலன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! திக்குமுக்காடி போன விக்னேஷ் சிவன்!
கோவா சென்றுள்ள நயன்தாரா, அங்கேயே தற்போது தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நேற்று குதூகலமாக கொண்டாடினார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த சர்பிரைஸ் பற்றி, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள்.
கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நயனும், விக்கியும் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானம் மூலம் கொச்சி சென்ற போட்டோஸ் வெளியானது.
அங்கு மாமியார் வீட்டில் தடபுடலாக ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர, அவை தாறுமாறு வைரலாகின.
கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இதனால் கிடைத்த இந்த கொஞ்ச நாட்களை குதூகலமாக செலவிடலாம் என முடிவு செய்த காதல் ஜோடி தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளது.
கோவாவில் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் கார்டனில் நயன்தாரா உலவும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோவாவில் தன்னுடைய மாமியார் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் வெளியானது.
இதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் நேற்று தன்னுடைய , காதலி நயன்தாராவுடன் 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
காதலர் விக்னேஷ் சிவனுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில், நயன்தாரா, கேக் வெட்டி, ஆடல், பாடல் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரொம்ப கொடுத்து வச்சவர் விக்கி என நயன் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.