தயாரிப்பாளரை தலை சுற்ற வைத்த நயன்தாரா ... இந்தி பட ரீமேக்கில் நடிக்க இத்தனை கோடியா சம்பளம் கேட்பது?
இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக நயன்தாரா கேட்டதாக கூறப்படும் சம்பளம் தயாரிப்பாளரை தலை சுற்றவைத்து விட்டதாம்.
35 வயதனாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. முன்னணி நடிகர்களின் படம் என்றாலே நயன்தாரா கால்ஷீட் முக்கியம் என்பது போல் ஆகிவிட்டது.
அப்படித்தான் கடந்த ஆண்டு வெளியான பிகில், தர்பார் இரண்டு திரைப்படங்களிலும் நயன்தாராவிற்கு முக்கியத்துவமே இல்லை என்றாலும், ஸ்டார் ஹீரோக்களுக்காக கோடிகளில் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்திருப்பார்கள். அவரும் வந்ததுக்கு ஒரு பாட்டுக்கு ஆட்டத்தை போட்டுவிட்டு போய் இருப்பார்கள்.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் முதன் முறையாக நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கபடாததால் படம் வெளியாகாமல் உள்ளது.
அதுமட்டுமின்றி காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் காத்து வாக்குல இரண்டு காதல், அவருடைய தயாரிப்பில் நெற்றிக்கண், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் என அம்மணி கைவசம் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.
உச்சத்தில் இருக்கும் மார்க்கெட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நயன்தாரா, சமீபத்தில் இந்தி பட ரீமேக் ஒன்றில் நடிப்பதற்காக கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளரிடம் கேட்ட சம்பள தொகை கோலிவுட்டில் பல கிசு கிசுக்களை கிளப்பியுள்ளது.
இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன். பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றியுள்ள தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து எடுக்கவைக்க உள்ளார். இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார்.
இதேபோல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ள அந்தாதுன் படத்தில் நிதின் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.
அதனால் தயாரிப்பாளர் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் வேறு யாரை ஹீரோயினாக போடலாம் என யோசித்து வருகிறாராம்.