நயன்தாராவின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் தேசிய விருது பிரபலத்தின் மகள்..!
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதல் முறையாக நடிகை சமந்தாவுடன், இணைத்து காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல் ' படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தில், பிரபல தேசிய விருது பிரபலத்தின் மகள் இணைந்துள்ளார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்னரே... இந்த படம் குறித்த தகவல் வெளியாகி இருந்தாலும் கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால் அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கியது.
எனவே நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன், ஜாலியாக தனி விமானம் மூலம், கேரளா, கோவா என பறந்தார்.
தற்போது மத்திய மாநில அரசுகள் மீண்டும் படப்பிடிப்பு துவங்க அனுமதி கொடுத்துள்ளதால், நயன் மலையாளத்தில் 'நிழல்' என்கிற படத்தில் நடித்து வந்தார். இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்... சமந்தா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடிக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்', படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் போடப்பட்டது.
இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித் குமார், மற்றும் ஹீரோ விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்ற உள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது கலை இயக்குனர் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் முதல் முறையாக, கலை இயக்குனர் சாபு சிறிலின் மகள், ஸ்வேதா சாபு சிறில் கலை இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.