தற்கொலை செய்துகொள்வேன்...! சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செயலால் கண்ணீர் விட்டு கதறும் நாட்டுப்புற பாடகி..! ஏன்?
தான் எழுதி, பாடிய நாட்டுப்புற பாடல்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி... வேறு ஒருவர் பாடியதாக கூறி பொய் பரப்புரையில் ஈடுபடுவது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக மதுரமல்லி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமியை போல் நாட்டுப்புற பாடகி மதுர மல்லி என்பவர், பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவர் "மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது" என்ற பாடலை பாடி அதன் வீடியோவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே யூடியூபில் வெளியிட அது இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடந்த கோவில் விழாவில் பாடிய நாட்டுப்புற கலைஞர் ராஜலட்சுமி - செந்தில் கணேஷ் ஜோடி "மாமான்னு கூப்பிட தான் மனசு சொல்லுது" என்கிற பாடலை, தன்னுடைய தங்கை கலைவாணி என்பவர் தான் இயற்றி பாடியதாக கூறியதுதான் தற்போதைய சர்ச்சைக்கு முக்கிய காரணம்.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்த பாடலை இயற்றி, பாடிய, மதுர மல்லி தன்னுடைய பாடலுக்கு வேறு ஒரு பெண்ணை சொந்தம் கொண்டாட வைப்பது மிகவும் கீழ்த்தரமானது என்றும், இதற்க்கு அவர் வெட்கப்பட வேண்டும் என தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பாடலுக்கு வேறு ஒருவரை சொந்தம் கொண்டாட வைத்துள்ளது தன்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனஉளைச்சலில் தள்ளியுள்ளதாகவும். ராஜலட்சுமி தன்னுடைய தவறை உணர்ந்து, கூறிய வார்த்தையை வாபஸ் பெறுவது மட்டும் இன்றி, அதற்க்கு உரிய விளக்கமும் கொடுக்க வேண்டு என, மதுர மல்லி தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற கவிஞர் செல்ல தங்கையா என்பவரின் பாடல்களின் வரிகளுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்து பாடிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தற்போது இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி.
மேலும் மதுரமல்லி தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த பாடல் குறித்த உண்மை தெரியாமல் வாயை விட்டதால் ராஜலட்சுமி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.