- Home
- Cinema
- பகீர் கிளப்பிய மர்ம நபர்! திரிஷா, விஷால், மணிரத்னம் வீட்டில் குவிந்த போலீஸ்! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
பகீர் கிளப்பிய மர்ம நபர்! திரிஷா, விஷால், மணிரத்னம் வீட்டில் குவிந்த போலீஸ்! இதுக்கு ஒரு முடிவே இல்லையா?
திரை பிரபலங்கள் திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
தமிழகத்தில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, நடிகை திரிஷா என பல்வேறு பிரபலங்களில் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிலையில், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில், திரை பிரபலங்கள் நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
விரைந்து சென்று காவல்துறை சோதனை
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் பகீர் கிளப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல் ஏன்?
திரிஷா வீட்டில் ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 2வது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெரிய பாலியல், கொளை குற்றங்களில் ஈடுபடுபவர்களை தமிழக காவல்துறையினர் தங்களின் திறமையால் உடனடியாக பிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்த வெடிகுண்டு மிரட்டல்களை விடுப்பவர்கள் காவல்துறையிருக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். மிரட்டல் விடுக்கும் இமெயில் ஐபி அட்ரஸ் மாறி மாறி வருவதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.