வாடகை கார் பணத்தை ஏமாற்றிய விவகாரம்..! நடிகை முமைத்கான் எடுத்த அதிரடி நடவடிக்கை..!
தமிழில், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் சிறு சிறு கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை முமைத்கான், வாடகை கார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக இவர் மீது கார் ஓட்டுநர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் நடிகர் பிரஷாந்த் நடித்த 'ஜெய்' படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானவர் முமைத்கான்.
இதை தொடர்ந்து தலைநகரம், போக்கிரி, வில்லு, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில் இவர் மீது கார் ஓட்டுநர் ராஜு என்பவர் தனக்கு தர வேண்டிய கார் வாடகை ரூபாய் 15 ஆயிரத்தை கொடுக்காமல் முமைத்கான் ஏமாற்றுவதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8 நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் பின்னர் தனக்குத் தரவேண்டிய 15 ஆயிரத்தை தரவில்லை என தெரிவித்தார்.
இதற்க்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை போன்றவற்றை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கார் ஓட்டுனரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகை முமைத்கான், அவர் மீது அதிரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசாரின் விசாரணைக்கு பின்னரே, உண்மையில் யார் மீது தவறு உள்ளது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.