MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

சரியான நேரத்தில் பாடல் எழுதிக் கொடுத்தும், திரைப்படம் வெளியாகாததற்கு 'வாலி' தான் காரணம் என எம்.ஜி.ஆர் அவரை கோபப்பட்டு திட்டிய சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 13 2024, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lyricist Vaali

Lyricist Vaali

நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய லெஜெண்ட், கவிஞர் வாலி. இவர் திரைப்படங்களில் தன்னுடைய பாடல் வரிகளை நேர்த்தியாக கையாளுவதில் வல்லவர். அதேபோல் காதல், தத்துவம், சோகம், நட்பு, உறவு, என இவர் திரைப்படத்தில் தொடாத டாபிக்கே இல்லை. 15000 மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, புரட்சி நடிகர் எம்ஜிஆர்-க்கு மட்டும், சுமார் 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
MGR And Vaali Combo hit Songs

MGR And Vaali Combo hit Songs

கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆர் மிகவும் ரசித்தது வாலியின் வரிகளை தான். இதற்க்கு உதாரணம், மாநாடு ஒன்றில் எம்ஜிஆர் வெளிப்படையாகவே இனி கண்ணதாசன் தன்னுடைய படங்களுக்கு பாடல் எழுதமாட்டார் என்றும், வாலி தான் தன்னுடைய படங்களுக்கு பாடல்களை எழுத போகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தகவல்,  தினத்தந்தி உட்பட அப்போது பிரபலமாக இருந்த நாளிதழ்களில் பிக் பிரேக்கிங்காக வெளியானதாம். இந்த தகவலை வாலியை தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'லால் சலாம்' படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை மூன்றே நாளில் அடித்து பறக்கவிட்ட 'வேட்டையன்'!

35
Actor MGR Thalaivan Movie

Actor MGR Thalaivan Movie

எம்ஜிஆர் பாடல்களில், அரசியலையும் ஒன்றிணைத்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியது வாலியின் வரிகள் தான். அந்த அளவுக்கு வாலியின் கைவண்ணத்தில் வெளியான பாடல்கள் தனித்துவமானதாகவும், மக்களை எளிதில் சென்றடைய கூடிய வலிமை பெற்றதாகவும் இருந்தன.
 

45
MGR Scolding Vaali

MGR Scolding Vaali

எம்ஜிஆரை பொறுத்தவரை தன்னுடைய படங்களில் இடம்பெறும் பாடல்களின் வார்த்தைக்கு சக்தி அதிகம் இருப்பதாக நம்புபவர். எனவே எந்த விதத்திலும் நெகட்டிவான வார்த்தைகள் இடம்பெற கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பாராம். பலமுறை இதை வாலியிடம் கூறி, தமிழில் பல அறச்சொற்கள் உண்டு... "ஒரு சொல் வெல்லும், அதே நேரம் ஒரு சொல் கொள்ளும்" என்கிற பழமொழிக்கு ஏற்ப வார்த்தைகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள் என பலமுறை கூறி உள்ளாராம்.

பிக்பாஸ் வீட்டில் குறும்படம் போட மறுத்த விஜய் சேதுபதி; மகாலட்சுமி சொன்னதை நினைத்து கண்ணீர் வடித்த ரவீந்தர்!
 

55
MGR Trust Tamil Words

MGR Trust Tamil Words

ஆனால் எம்ஜிஆர் சொன்னதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், அவர்  நடிப்பில் 1970 ஆம் ஆண்டு தாமஸ் மற்றும் சிங்கமுத்து இயக்கத்தில் வெளியான 'தலைவன்' திரைப்படத்தில் "நீராடி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில், தலைவன் வராமல் காத்திருந்தாள்". என்கிற அறச்சொல்லுடன் ஒரு பாடலை வாலி எழுத, "தலைவன் வராமல் காத்திருந்தால்"... என்கிற வார்த்தையால் தான் திரைப்படம் உரிய நேரத்தில் வெளியாகாமல் போனது என எண்ணி... வாலியை கோபித்து கடிந்து கொண்டாராம் எம்.ஜி.ஆர். இதை கேட்கும் போது ... இதெல்லாம் பெரிய விஷயமா? என தோன்றினாலும் தமிழ் வார்த்தைகளுக்கு உள்ள சக்தியை எந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் நம்பினார் என்பது தெரியும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved