- Home
- Cinema
- பாட்டியோடு ஹேப்பி பர்த்டே கொண்டாடிய மேகா ஆகாஷ் - அம்மாச்சி- என்ன ஒரு பாசம், என்ன ஒரு நேசம்!
பாட்டியோடு ஹேப்பி பர்த்டே கொண்டாடிய மேகா ஆகாஷ் - அம்மாச்சி- என்ன ஒரு பாசம், என்ன ஒரு நேசம்!
நடிகை மேகா ஆகாஷ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேகா ஆகாஷ்
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்தப் படம் கொடுத்த அறிமுகம், இவரை தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தது. பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
மேகா ஆகாஷ்
தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், 31 அக்டோபர் லேடிஸ் நைட், மழை பிடிக்காத மனிதன், ராவணசுரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போடுதும் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தனது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேகா ஆகாஷ்
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என் அன்பான அம்மாச்சி. நான் இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்ததில்லை, நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன் என்று எனக்கு உண்மையாகத் தெரியவில்லை… ஆனால் நான் உன்னைப் போல் இருந்தால் நான் பிழைப்பேன். நீங்கள் ஒரு பீனிக்ஸ் பறவையாக இருந்தீர்கள். நீங்கள் எனக்கு தெரிந்த அன்பான, வேடிக்கையானவர். நீங்கள் எப்போதும் மக்களுக்கு உணவளித்து அவர்களின் முகத்தில் புன்னகையை வைத்தீர்கள்.
மேகா ஆகாஷ்
என்னுடைய சிறந்த நண்பன். உங்களுடன் கிசுகிசுப்பதை நான் விரும்பினேன். தினமும் உன்னிடம் பேசாமல் இருப்பதையும், நீ வாவே என்று சொல்வதையும் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் இப்போது உங்கள் மனிதருடன் இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் இருக்க விரும்பும் இடம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் நன்றி! ஞாயிற்றுக்கிழமைகள் நமக்கு இனி ஒருபோதும் மாறாது. அனைவரிடத்திலும் நான் உங்களை பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் எங்கள் மூலம் வாழ்வீர்கள். என் முதல் அன்பே நிம்மதியாக இரு. நாம் மீண்டும் சந்திக்கும் வரை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவில்லை. ஒருவேளை அவரது அம்மாச்சி இறந்துள்ளாரா, அதற்காக இந்தப் புகைப்படத்தை பகிர்ந்தாரா என்று தெரியவில்லை. ஆனால், அம்மாச்சியின் பிரிவால் இதனை பதிவிட்டுள்ளார் என்று மட்டும் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.