MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடும்ப வழக்கத்தை தூக்கி எறிந்த மனோ பாலாவின் மனைவி! கணவர் இறந்த ஒரே வாரத்தில் செய்த நெகிழவைக்கும் செயல்!

குடும்ப வழக்கத்தை தூக்கி எறிந்த மனோ பாலாவின் மனைவி! கணவர் இறந்த ஒரே வாரத்தில் செய்த நெகிழவைக்கும் செயல்!

கடந்த வாரம், இயக்குனரும், நடிகருமான மனோ பாலா உயிரிழந்த நிலையில்.. அவரின் மனைவி உஷா குடும்ப வழக்கத்தை தகர்த்தெறிந்து, செய்துள்ள செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

3 Min read
manimegalai a
Published : May 08 2023, 07:07 PM IST| Updated : May 08 2023, 09:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

மனோபாலா தன்னுடைய இளமைப் பருவத்திலேயே, சினிமா மீது இருந்த தீவிர ஆசையால் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம்... மறுகூரை விட்டு, பெற்றோரிடம் படிக்கச் செல்கிறேன் என்று பொய் சொல்லி விட்டு, சென்னை வந்து சேர்ந்தார். பெற்றோர் படிப்பிக்காக அனுப்பும் பணத்தை வைத்து படித்தாரோ இல்லையோ, சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பல படத்தைப் பார்த்தார். இதன் மூலம் தானும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் துளிர்விட்டது.

29

எதேர்சையாக ஒரு சமயம் உலகநாயகன் கமலஹாசனை சந்திக்கும் வாய்ப்பு மனோபாலாவுக்கு கிடைத்தது. சில நிமிடங்கள் மனோபாலாவுடன் பேசிய கமலஹாசன், பின்னர் அவரின் நண்பராகவும் மாறினார். மனோபாலாவின் சினிமா ஆசைக்கு உயிர் கொடுக்க விரும்பிய கமலஹாசன், அவரை நேராக அழைத்துச் சென்று, தன்னுடைய குரு பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக சேர்த்துவிட்டார்.

நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை பட்ட த்ரிஷா! பொசுக்குன்னு இப்படி சொல்லி குந்தவையை அப்செட்டாக்கிய மணிரத்னம்

39

அந்த வகையில், பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய மனோபாலா... பின்னர் ஒரு சில வருடங்களிலேயே படம் எடுக்கும் திறமையை வளர்த்துக் கொண்டு, ஆகாய கங்கை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க மனோபாலாவுக்கு மூன்று வருடங்கள் ஆனது.

49

அந்த வகையில் பிள்ளை நிலா, படத்தின் வெற்றிக்கு பின்னர் பாரு பாரு பட்டணம் பாரு,  சிறை பறவைகள், தூரத்து பச்சை, ஊர்காவலன், என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் சின்ன திரையிலும் பஞ்சவர்ணம் மற்றும் புன்னகை ஆகிய சீரியல்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து முடிவெடுத்த விஜய் டிவி சீரியல் ஜோடி? திருமண போட்டோவை நீங்கியதால் அதிர்ச்சி!

59

படங்கள் இயக்குவதை தாண்டி, தற்போதைய இளம் ரசிகர்கள் மத்தியில் முன்னணி காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானார். இந்நிலையில், மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம்  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உடல்நலம் தேறி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

69

படங்கள் இயக்குவதை தாண்டி, தற்போதைய இளம் ரசிகர்கள் மத்தியில் முன்னணி காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானார். இந்நிலையில், மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம்  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உடல்நலம் தேறி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

நிற்ககூட முடியல... ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? பயில்வான் சொன்ன ஷாக் தகவல்

79

இதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக, மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மே 3-ஆம் தேதி தன்னுடைய 69 வயதில் உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் பெரும் அளவு பாதித்தது. எப்போதும் துருதுருவென்று ஓடிக்கொண்டே இருக்கும் மனோ பாலா 80 வயது வரை வாழக்கூடிய ஒரு மனிதர் என்றும், அவரது இறப்பு பெரும் துயரத்தை தருவதாக பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

89

மேலும் தளபதி விஜய், சத்யராஜ், பாரதிராஜா, நட்டி, கார்த்தி,  உதயநிதி ஸ்டாலின் போன்ற பலர்  நேரடியாக சென்று மனோபாலாவுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தினர். மனோபாலாவின் மரணத்திற்கு காரணம் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் என்றும் சொல்லப்பட்டது.

என் நீண்ட நாள் ஆசை 'கஸ்டடி' படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது! உச்சு குளிர்ந்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு!

99

இந்நிலையில் தன்னுடைய கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனோ பாலாவின் மனைவி உஷா செய்துள்ள செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பொதுவாக மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால், அவர்களின் உடைகள் மற்றும் உடைமைகளை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். ஆனால் அப்படி செய்வதை விரும்பாத மனோபாலாவின் மனைவி உஷா, தன்னுடைய கணவரின் உடைமைகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் கணவரின் நினைவாக ஒரே ஒரு வாட்சை மட்டுமே தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள். 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved