MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இயற்கையின் கோர முகம்... வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி - ஃபகத் பாசில் உதவிக்கரம்!

இயற்கையின் கோர முகம்... வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி - ஃபகத் பாசில் உதவிக்கரம்!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு மம்முட்டி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். 

2 Min read
manimegalai a
Published : Aug 01 2024, 07:06 PM IST| Updated : Aug 01 2024, 07:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Wayanad Landslide

Wayanad Landslide

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக பருவ மழை பெய்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன், வயநாட்டில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பள்ளத்தாக்குகளில் இருந்த சுமார் 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
 

25
Government save People:

Government save People:

இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தால், பலர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே மண்ணுக்குள் புதையும் நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் மண்ணில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களையும், ரத்த காயங்களுடன் இருப்பவர்களையும் மத்திய மற்றும் மாநில மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், கடல் படையினர், விமானப் படையினர், தீயணைப்பு துறையினர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீட்க போராடி வருகிறார்கள்.

80-ஆவது வயதில் அடியெடுத்து வைத்த டெல்லி கணேஷுக்கு நடந்த சதாபிஷேகம்! மணக்கோலத்தில் இருக்கும் போட்டோஸ்!
 

35
More Dead bodies found in Wayanad landslide:

More Dead bodies found in Wayanad landslide:

மேலும் பல மண்ணை தோண்ட தோண்ட சட்டங்கள் கிடைத்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சேதத்தில் இருந்து மக்களை மீட்க, கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் வசதி படைத்தோர் நிதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

45
actor chiyaan vikram donates 20 lakhs

actor chiyaan vikram donates 20 lakhs

எனவே நேற்றைய தினம் நடிகர் சீயான் விக்ரம் முதல் ஆளாக வந்து ரூபாய் 20 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். அவரை தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் நிவாரண நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலையாள திரையுலகை சேர்ந்த இரு பிரபலங்கள் நிவாரண நிதி குறித்து அறிவித்துள்ளனர்.

கண்ணே பட்டுடும்! நிச்சயதார்த்தத்தில் கூட சிம்பிளாக இருக்கும் ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் Unseen போட்டோஸ்!

55
mammootty and Fahadh Faasil Help

mammootty and Fahadh Faasil Help

அந்த வகையில் நடிகர் மம்மூட்டி மற்றும் அவருடைய மகன் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து ரூ.35 லட்சம் நிவாரண நிதியை வழங்கி உள்ளனர். இவரை தொடர்ந்து நடிகை நஸ்ரியா மற்றும் அவருடைய கணவர் ஃபகத் பாசில் இருவரும் இணைந்து ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மம்முட்டி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved