- Home
- Cinema
- மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் அவர் உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Case Against Actor Vijay
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது மனைவிக்கு 12.60 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டது தொடர்பாக விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது. பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான வெங்கடேஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கின் பின்னணி என்ன?
அவரது மனுவில், "விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், அவருக்கு 12.60 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது," என்று கூறப்பட்டிருந்தது. மேலும், "தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களைத் தெரிவிப்பது வெறும் சடங்கு அல்ல. உண்மையான தகவல்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை ஏமாற்றும் செயல்," என்றும் மனுதாரர் வாதிட்டிருந்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஒரு தனியார் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிக்காரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, இதேபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கையும் விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
எலெக்ஷன் முடிந்தது
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் நுழைவு, சட்டமன்றத் தேர்தலை மும்முனைப் போட்டியாக மாற்றியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி (இந்திய தேசிய காங்கிரஸ், தேமுதிக, விசிக), அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக, பாமக), மற்றும் தவெக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
ரிசல்ட் எப்போது?
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ந் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 85.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுடன் சேர்த்து, தமிழக தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி அறிவிக்கப்படும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

