தேசிய விருது பெற்ற பழம் பெரும் நடிகர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
செளமித்திர சட்டர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் செளமித்திர சட்டர்ஜி. 1959ம் ஆண்டு அப்பூர் சன்சார் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
உலகின் தலை சிறந்த இயக்குநராக போற்றப்படும் சத்ய ஜித்ரேவின் சாருலதா, ஆரன்ய தீன் ராத்திரி, ஆஷனி சங்கர், ஷாகா புரோசாகா உள்ளிட்ட ஏராளமான பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.
புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஷர்மிளா டாகூருடன் இணைந்து பல்வேறு படங்களில் இணைந்து நடித்ததன் மூலமாக இருவரும் பெங்காலி ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்தனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, 2004 மத்திய அரசின் பத்ம பூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற செளமித்திர சட்டர்ஜி இன்று மரணமடைந்தார் என்ற செய்தி திரையுலகில் பலரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
செளமித்திர சட்டர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
அவர் சில நாட்களிலேயே கொரோனா தொற்றிலிருந்து மீண்ட போதும், நரம்பியல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
பெல்லி வ்யூ கிளினிக்கில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சௌமித்ர சட்டர்ஜி மதியம் 12.15 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.