MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தோளில் கை போட்டு அத்து மீறிய மாணவர்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய அபர்ணா பாலமுரளி.. சஸ்பென்ட் செய்த கல்லூரி!

தோளில் கை போட்டு அத்து மீறிய மாணவர்! ஆதங்கத்தை வெளிப்படுத்திய அபர்ணா பாலமுரளி.. சஸ்பென்ட் செய்த கல்லூரி!

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சட்ட கல்லூரிக்கு வருகை தந்த, நடிகை அபர்ணா பாலமுரளியிடம் சட்டக் கல்லூரி மாணவர், அத்துமீறி நடந்து கொண்டது குறித்து நடிகை தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  மேலும் கல்லூரி நிர்வாகமும் இவர் மீது தக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

1 Min read
manimegalai a
Published : Jan 21 2023, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aparna Balamurali

Aparna Balamurali

தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள திரையுலகை சேர்ந்த அபர்ணா பாலமுரளி. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

25

இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, தற்போது மலையாளத்தில் வினீத் நடித்துள்ள தன்கம் படத்தில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளே கதறி அழுத விக்ரமன்! ஏன்... வைரலாகும் வீடியோ!

35
aparna balamurali

aparna balamurali

இந்த திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளநிலையில், நடிகர் வினீத், அபர்ணா பாலமுரளி ஆகியோர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக சட்ட கல்லூரிக்கு சென்றிருந்தனர். அப்போது அபர்ணா பாலமுரளிக்கு பூ கொடுத்து வரவேற்ற மாணவர் ஒருவர், அவரின் தோல் மீது கைபோட்டு புகைப்படம் எடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

45

பின்னர் அந்த மாணவன், ரசிகர் என்கிற முறையில் உணர்ச்சி வசப்பட்டு அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள அபர்ணா பாலமுரளி, பெண்ணின் அனுமதி இன்றி தொடக்கூடாது என்பது சட்ட கல்லூரி மாணவருக்கு தெரியாதா, என கேள்வி எழுப்பி அந்த மாணவரின் செயலுக்கு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

சிறை வாசிகளுக்காக... புத்தகம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த பார்த்திபன்! குவியும் பாராட்டுக்கள்..!

55

இந்நிலையில் அந்த மாணவனை எர்ணாகுளம் சட்ட கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அந்த மாணவர் பெயர் விஷ்ணு என்பதும் அவர் இரண்டாம் ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved