MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவிற்கு குழந்தை பிறந்தது..! புகைப்படத்தோடு வெளியான தகவல்! குவியும் வாழ்த்து..!

கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவிற்கு குழந்தை பிறந்தது..! புகைப்படத்தோடு வெளியான தகவல்! குவியும் வாழ்த்து..!

கயல் சீரியல் நடிகை அபி நவ்யா கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. புகைப்படத்துடன் இந்த தகவலை அவர் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

2 Min read
manimegalai a
Published : Nov 23 2022, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியலான, பிரியமானவளே மற்றும் கண்மணி போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அபி நவ்யா. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கெரியரை தொலைக்காட்சியில் துவங்கி, பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

26

இதைத் தொடர்ந்து, சூப்பர் ஹிட் சீரியல்களில் தனித்துவமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த இவர், தற்போது சன் டிவியில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவி நடித்து வரும் கயல் சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

'வாரிசு'-க்கு நோ பிராபலம்..! தெலுங்கு ரிலீஸ் குறித்து பாசிட்டிவ் பதில் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்..!

36

இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான சீரியல் நடிகர் தீப்பக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
 

46
abinavya

abinavya

அவ்வப்போது, தன்னுடைய பிரக்னன்சி போட்டோஷூட் மற்றும் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த இவருக்கு, தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இவருடைய கணவரான தீபக் சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 

'வாரிசு' பட படப்பிடிப்பில் கைகலப்பு! வெறித்தனமாக தாக்கப்பட்ட செய்தியாளர்கள்? என்ன காரணம்..! வெளியான உண்மை!

56

தீபக் தற்போது  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 ஆகிய தொடர்களில் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

66

தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு,  அவர் போட்டுள்ள பதிவில் கடவுள் நம் மீது பொழிந்த கருணையின் காரணமாக விலைமதிப்பில்லாத பரிசு நமக்கு கிடைத்துள்ளது. நர்ஸ் தன் கையில் குழந்தையை வைத்த போது நான் உயிருடனும்,  உச்சாகத்துடனும் உணர்தேன். அனைவருடைய ஆசீர்வாதமும், பிரார்த்தனையும் தங்களுக்கு தேவை என கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களின் தீபக் - அபி நவ்யா தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Breaking: நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved